வேலூர் தொகுதியில் தாமரை சின்னத்தில் போட்டி - ஏ.சி.சண்முகம் அறிவிப்பு

by Staff / 10-02-2024 03:27:28pm
வேலூர் தொகுதியில் தாமரை சின்னத்தில் போட்டி - ஏ.சி.சண்முகம் அறிவிப்பு


வேலூர் தொகுதியில் தாமரை சின்னத்தில் போட்டியிடப்போவதாக புதிய நீதிக்கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் தெரிவித்துள்ளார். சென்னையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அவர், கடந்த 6 மாதங்களாக தேர்தல் பணியை மேற்கொண்டு வருகிறோம். வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் தாமரைச் சின்னத்தில் போட்டியிடுகிறேன் என கூறினார். கடந்த முறையும் தேசிய ஜனநாயக கூட்டணியில் கூட்டணியில் இருந்த ஏ.சி.சண்முகம் சண்முகம், பாஜக, அதிமுக கூட்டணி உடைந்த பின்பு, பாஜகவுடனேயே தொடர்கிறார். அதிமுக கூட்டணியில் இருந்த தமாகா, தமமுக உள்ளிட்ட கட்சிகளின் நிலைபாடு என்ன என்பது இதுவரை தெரியவில்லை.

 

Tags :

Share via