டிஏபி, யூரியா போன்ற உரங்கள் எங்குமே கிடைக்கவில்லை என் விவசாயிகள் வேதனை-சசிகலா அறிக்கை

by Editor / 06-10-2022 11:32:32pm
 டிஏபி, யூரியா போன்ற உரங்கள் எங்குமே கிடைக்கவில்லை என் விவசாயிகள் வேதனை-சசிகலா அறிக்கை

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான வீ .கே.சசிகலா வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:- தமிழகத்தின் நெற்களஞ்சியமான டெல்டா மாவட்டங்களில் தற்போது நிலவும் உரத்தட்டுப்பாடு மிகவும் கவலை அடைய செய்கிறது. தற்போது டிஏபி, யூரியா போன்ற உரங்கள் எங்குமே கிடைக்கவில்லை என் விவசாயிகள் வேதனைப் படுகிறார்கள். இன்றைய திமுக தலைமையிலான அரசு தமிழகத்தில் விவசாயத்தை அழிக்கின்ற வகையில் தனது செயல்பாடுகளை தொடர்ந்து செய்து வருவது மிகவும் கண்டிக்கத்தக்கது என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via