தனியார் ஆஸ்பத்திரிகளில் இலவச தடுப்பூசி செலுத்தும் திட்டம்- மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

by Admin / 25-07-2021 06:10:31pm
தனியார் ஆஸ்பத்திரிகளில் இலவச தடுப்பூசி செலுத்தும் திட்டம்- மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

தனியார் ஆஸ்பத்திரிகளில் இலவச தடுப்பூசி செலுத்தும் திட்டம்- மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்

தமிழகத்தில் தனியார் மருத்துவமனைகளில் சி.எஸ்.ஆர். நிதிப்பங்களிப்பில் பொதுமக்களுக்கு இலவச தடுப்பூசி செலுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

 இந்த திட்டத்தை சென்னையில் வருகிற 28-ந் தேதி (புதன்கிழமை) முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள தனியார் மருத்துவமனைகளில் பொதுமக்களுக்கு இலவச தடுப்பூசி செலுத்தும் திட்டம் தமிழக சுகாதாரத்துறையின் சார்பில் செயல்படுத்தப்பட உள்ளது.

சென்னை-கோவை என இரு இடங்களில் தனியார் மருத்துவமனைகள் மண்டல அளவிலான ஒருங்கிணைப்பு ஆலோசனைக் கூட்டம் அண்மையில் நடைபெற்று முடிந்த நிலையில் சி.எஸ்.ஆர். நிதி மூலமாக தனியார் மருத்துவமனைகளில் இலவச தடுப்பூசி செலுத்தப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via