ஷவர்மாவுக்கு சிக்கன் சப்ளை செய்த கோழிக் கடை உரிமையாளர் கைது

by Staff / 19-09-2023 03:46:57pm
ஷவர்மாவுக்கு சிக்கன் சப்ளை செய்த கோழிக் கடை உரிமையாளர் கைது

நாமக்கலில் ஷவர்மா சாப்பிட்டு 14 வயது சிறுமி உயிரிழந்த விவகாரத்தில், சம்பந்தப்பட்ட துரித உணவகத்திற்கு சிக்கன் சப்ளை செய்த கோழிக் கடை உரிமையாளர் சீனிவாசன் கைது செய்யப்பட்டுள்ளார். மூன்று பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஷவர்மா விற்ற ஹோட்டலுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நாமக்கல் மாவட்டத்தில் துரித உணவு வகைகளான ஷவர்மா, கிரில் சிக்கன் ஆகியவற்றை விற்பனை செய்ய தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

Tags :

Share via