ஹூக்கா பார்களை தடை செய்யும் கர்நாடகா

by Staff / 21-09-2023 05:26:58pm
ஹூக்கா பார்களை தடை செய்யும் கர்நாடகா


போதைப் பொருட்களுக்கு அடிமையாகும் இளைஞர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதைத் தடுப்பதற்காக கர்நாடக அரசு, புகையிலை பொருட்களை வாங்குவதற்கான குறைந்தபட்ச வயதை 21 ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளது. இதனை அடுத்து கர்நாடகாவில் ஹூக்கா பார்களைத் தடை செய்யவும் முடிவு செய்துள்ளதாக கர்நாடக மாநில சுகாதாரத்துறை அமைச்சர் தினேஷ் குண்டுராவ் தெரிவித்தார். மேலும் பள்ளிகள், கோயில்களைச் சுற்றிலும் போதைப் பொருட்களை விற்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
 

 

Tags :

Share via