கனடா பிரதமர் மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்து

by Staff / 23-09-2023 01:22:53pm
கனடா பிரதமர் மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்து

கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ மீண்டும் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்துள்ளார். காலிஸ்தான் தலைவர் ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்டதற்குப் பின்னணியில் இந்திய ஏஜென்டுகள் இருக்கலாம் என்ற நம்பகமான தகவலை சில வாரங்களுக்கு முன்பு கனடா இந்தியாவிடம் தெரிவித்ததாக ட்ரூடோ கூறினார். இந்த விஷயத்தில் இந்தியாவுடன் ஆக்கப்பூர்வமாக செயல்பட நாங்கள் தயாராக இருக்கிறோம். உண்மைகளைக் கண்டறிய அவர்கள் எங்களுடன் இணைந்து பணியாற்றுவார்கள் என்று நம்புகிறோம்.' இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

Tags :

Share via