தொடர் விடுமுறை அலைமோதும் மக்கள் கூட்டம் 

by Editor / 13-01-2024 09:20:25am
தொடர் விடுமுறை அலைமோதும் மக்கள் கூட்டம் 

பொங்கல் பண்டிகை  நாளை மறுநாளை கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையை குடும்பத்துடன் கொண்டாட சிறப்பு பேருந்துகளில் சொந்த ஊர்களுக்கு பொதுமக்கள் பயணித்து வருகின்றனர். நேற்று இரவு 12 மணி நிலவரப்படி 1,260 சிறப்பு பேருந்துகளுடன் மொத்தம் 3,946 பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. 3946 பேருந்துகளில் 2,17,030 பயணிகள் சொந்த ஊருக்கு பயணித்துள்ளனர். மேலும் இதுவரை 1,96,310 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர் என போக்குவரத்து துறை தகவல் தெரிவித்துள்ளது.இந்தநிலையில் தென்னகரயில்வேயும் தந்து பங்கிற்கு எந்தாண்டும் இல்லாதஅளவுக்கு இந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தென்மாவட்டங்க்ளுக்கு ஏராளமான சிறப்பு ரயில்களை இயக்கியவருகிறது.

 

Tags : தொடர் விடுமுறை அலைமோதும் மக்கள் கூட்டம் 

Share via