ஆசை வார்த்தை கூறி பெண்ணை கர்ப்பமாக்கி ஏமாற்றிய காதலன்

by Staff / 24-09-2023 02:09:55pm
ஆசை வார்த்தை கூறி பெண்ணை கர்ப்பமாக்கி ஏமாற்றிய காதலன்

கணவரை பிரிந்த அனிதா தன்னுடன் பள்ளியில் படித்த ரகுநாதன்( 31 ) என்பவருடன் காதலில் இருந்துள்ளார். பின்னர் இருவரும் தனிமையில் மிகவும் நெருக்கமாக இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் அனிதாவை ஆசை வார்த்தை கூறி கர்பமாக்கி ஏமாற்றியுள்ளார். மேலும் ரகுநாதனின் பெற்றோர் அனிதாவை கடுமையாக திட்டியும் அடித்தும் கர்ப்பத்தை கலைக்கச் சொல்லி மிரட்டி துரத்தி உள்ளனர். காதலனை நம்பி கணவருடன் விவாகரத்து பெற்ற பெண்ணை திருமணம் செய்வதாக கூறி கர்ப்பமாக்கி ஏமாற்றிய சம்பவம் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via