துணியைக் காயப் போட்ட பெண் மின்சாரம் தாக்கி பலி

by Staff / 26-09-2023 11:17:33am
துணியைக் காயப் போட்ட பெண் மின்சாரம் தாக்கி பலி

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே மாராடியைச் சேர்ந்தவர் மொரங்கன் மகன் அசோகன்(56). இவர் பெரம்பலூரில் தனியார் பள்ளியில் சமையலராக உள்ளார். இவரது மனைவி கவிதா(45). இவர் நேற்றிரவு துவைத்த துணிகளை ஆஸ்பெஸ்டாஸ் கூரைக்கு கீழே இருந்த இரும்புக் கொடிக் கம்பியில் காயப் போட்ட போது மின்சாரம் பாய்ந்து தூக்கி வீசப்பட்டார். உடனே வீட்டிலிருந்த அவரது மருமகள் 108 ஆம்புலன்ஸை வரவழைத்தார். ஆம்புலன்ஸில் இருந்த பணியாளர் கவிதாவை பரிசோதித்து விட்டு அவர் இறந்து விட்டதாக கூறியுள்ளார். இது தொடர்பாக அசோகன் கொடுத்த புகாரின் பேரில் உப்பிலியபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

 

Tags :

Share via