மணிப்பூரில் மீண்டும் கொடூரம்.

by Staff / 26-09-2023 12:22:41pm
மணிப்பூரில் மீண்டும் கொடூரம்.

மணிப்பூரில் மற்றொரு கொடூர சம்பவம் சமீபத்தில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஜூலை 6 ஆம் தேதி, மைதி பழங்குடியினத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமியும் 20 வயது இளைஞனும் காணாமல் போனார்கள். பல மாதங்களாக அங்கு இணையம் முடக்கப்பட்ட நிலையில் சமீபத்தில் அங்கு இணையம் மீட்டெடுக்கப்பட்டது. இதன் காரணமாக இருவரும் கொல்லப்பட்டது போன்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகின. அவர்கள் வனப்பகுதியில் பிடிபட்டதும், பின்னால் ஆயுதம் ஏந்தியவர்கள் நிற்பதும் போன்ற புகைப்படங்கள் வைரலாகி வருகின்றன. இதனை தொடர்ந்து இந்த வழக்கை சிபிஐ விசாரித்து வருகிறது.

 

Tags :

Share via