குடும்பங்கள் மற்றும் வணிகங்களுக்கான கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு 3 மாத கால அவகாசம் வழங்கு

by Admin / 15-12-2023 02:37:50pm
குடும்பங்கள் மற்றும் வணிகங்களுக்கான கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு 3 மாத கால அவகாசம் வழங்கு

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு தமிழக முதலமைச்சர் மு. க. ஸ்டாலின் வெள்ள நிவாரண உதவியை வழங்கிட வேண்டி கடிதம் எழுதியுள்ளார்.. அதில் , சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் மிக்ஜாம்புயலு க்குப் பிறகு கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கான அவசரத் தேவையை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவருகிறேன். பாதிக்கப்பட்ட 37 லட்சம் குடும்பங்கள் சீர்குலைந்த வாழ்வாதாரம் மற்றும் சொத்து சேதங்களுடன் போராடுகின்றன...

இந்த மாவட்டங்களில் உள்ள குடும்பங்கள் மற்றும் வணிகங்களுக்கான கடனைத் திருப்பிச் செலுத்துவதற்கு 3 மாத கால அவகாசத்தை வழங்குவதைக் கருத்தில் கொள்ளவும், இந்த சவாலான காலங்களில் மிகவும் தேவையான நிவாரணத்தை வழங்கவும்.அவர் குறிப்பிட்டுள்ளார்

 

Tags :

Share via