டூ - வீலரில் கஞ்சா கடத்தல் இருவருக்கு 5 ஆண்டு சிறை

by Staff / 26-09-2023 02:22:53pm
டூ - வீலரில் கஞ்சா கடத்தல் இருவருக்கு 5 ஆண்டு சிறை

திருவொற்றியூரில், 2020 அக். , 18ல் சாத்தாங்காடு போலீசாரின் வாகன சோதனையில் ஈடுபட்டனர். இதில், - வீலரில் கஞ்சா கடத்திய திருவல்லிக்கேணியைச் சேர்ந்த சண்முகம், 31, திருவொற்றியூரைச் சேர்ந்த சரவணன், 34, ஆகியோர் சிக்கினர். அவர்கள் அளித்த வாக்குமூலத்தின்படி, திருவள்ளூர், ஊத்துக்கோட்டையைச் சேர்ந்த சிவா, 42, என்பவரையும், போலீசார் கைது செய்தனர்; 9 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. வழக்கு, போதைப்பொருள் தடுப்பு வழக்குகளுக்கான சிறப்பு நீதிமன்ற முதன்மை நீதிபதி சி. திருமகள் முன் விசாரணைக்கு வந்தது. குற்றஞ்சாட்டப்பட்ட நபர்கள் தரப்பில், வழக்கறிஞர் டி. எஸ். சீனிவாசனும், போலீசார் சார்பில் சிறப்பு அரசு வழக்கறிஞர் கே. ஜெ. சரவணன் ஆஜராகினர். இரு தரப்பு வாதங்களுக்கு பின், நீதிபதி பிறப்பித்த தீர்ப்பு: சண்முகம், சரவணன் மீதான குற்றச்சாட்டுகள் சந்தேகத்துக்கு இடமின்றி, அரசு தரப்பு நிரூபித்துள்ளது. எனவே, அவர்களுக்கு தலா 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும், தலா 50, 000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது. வழக்கில் சேர்க்கப்பட்டுள்ள சிவா மீதான குற்றச்சாட்டுக்கு எதிராக ஆவணங்களை, அரசு தரப்பு தாக்கல் செய்யாததால், அவர் வழக்கில் இருந்து விடுதலை செய்யப்படுகிறார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Tags :

Share via