பேரிஜம் ஏரிக்கு சுற்றுலாப்பயணிகள் செல்ல 16  நாட்களுக்கு பிறகு நாளை முதல் மீண்டும் அனுமதி.

by Editor / 26-09-2023 11:44:59pm
பேரிஜம் ஏரிக்கு சுற்றுலாப்பயணிகள் செல்ல 16  நாட்களுக்கு பிறகு நாளை முதல் மீண்டும் அனுமதி.

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் வனத்துறை கட்டுப்பாட்டில் பேரிஜம் ஏரி உள்ளது.இந்த ஏரியில் கடந்த 10ஆம் தேதி காட்டு யானைகள் முகாமிட்டதை தொட‌ர்ந்து  சுற்றுலாப்பயணிகள் ந‌ல‌ன் ம‌ற்றும் பாதுகாப்பு க‌ருதி இந்த‌ப்ப‌குதிக்கு செல்ல வ‌ன‌த்துறையின‌ரால் த‌ற்காலிக‌ த‌டைவிதிக்க‌ப்ப‌ட்ட‌து.இதனை தொட‌ர்ந்து இந்த பகுதியில் முகாமிட்டு இருந்த காட்டு யானைகள் கூட்ட‌ம்  பேரிஜ‌ம்  வனப்பகுதியில் இருந்து வேறுப‌குதிக்கு இடம்பெயர்ந்து உள்ளதால், 16 நாட்களுக்கு பிறகு பேரிஜம் ஏரிக்கு சுற்றுலாப்பயணிகள் செல்ல நாளை முத‌ல் மீண்டும் அனுமதி- வனத்துறை அறிவிப்பு.

 

Tags : கொடைக்கானல் பேரிஜம் ஏரிக்கு சுற்றுலாப்பயணிகள் செல்ல 16  நாட்களுக்கு பிறகு அனுமதி.

Share via