திமுக நகராட்சி கவுன்சிலர் வீட்டுக்குள் புகுந்து தாக்குதல் விசிக நிர்வாகி உட்பட 3 பேர் கைது.

by Editor / 27-09-2023 08:20:15am
திமுக நகராட்சி கவுன்சிலர் வீட்டுக்குள் புகுந்து தாக்குதல் விசிக நிர்வாகி உட்பட 3 பேர் கைது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டையில் திமுக - அதிமுகவினர் இடையே தொடர்ந்து மோதல் நடைபெற்று வருவதால் உளுந்தூர்பேட்டையில் பதட்ட நிலை ஏற்பட்டுள்ளது இதனால் பல்வேறு இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர் இந்த நிலையில் கடந்த 24ஆம் தேதி இரவு திமுக நகராட்சி கவுன்சிலர் மனோபாலன் வீட்டுக்குள் புகுந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி விஜய் மற்றும் பிரவீன், ராஜ்குமார் உட்பட ஏழு பேர் மனோபாலன் வீட்டில் இருந்த அவரது சகோதரி மஞ்சுளா தேவி மற்றும் அவரது தாய் ஆகிய இருவரையும் கடுமையாக தாக்குதல் இதில் காயமடைந்த இருவரும் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனை சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர் இது குறித்த புகாரின் பேரில் ஆகிய மூன்று பேரையும் கைது செய்து உளுந்தூர்பேட்டை முதலாவது குற்றவியல் நீதிமன்ற நீதிபதி விக்னேஷ் முன்பு ஆஜர்படுத்தினர்.

 

Tags : திமுக கவுன்சிலர் வீட்டுக்குள் புகுந்து தாக்குதல் விசிக நிர்வாகி உட்பட 3 பேர் கைது.

Share via