பெற்ற மகளை தீ வைத்து கொளுத்திய தாய்

by Staff / 29-09-2023 04:02:52pm
பெற்ற மகளை தீ வைத்து கொளுத்திய தாய்

உத்திரப் பிரதேசத்தில் திருமணமாகாத இளம் பெண் ஒருவர் கர்ப்பமானதால் ஆத்திரமடைந்த தாய், தனது மகனுடன் சேர்ந்து பெற்ற மகள் என்றும் பாராமல் அப்பெண்ணை தீ வைத்து எரித்துள்ளார். ஹபூர் மாவட்டத்தில் உள்ள நவாத் குர்த் கிராமத்தில் இச்சம்பவம் நடந்துள்ளது. இளம்பெண் தற்போது 70 சதவீத தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருவதாக உள்ளூர் போலீசார் நேற்று தெரிவித்தனர். இந்த கொடூரத்தை செய்த இளம் பெண்ணின் தாய் மற்றும் சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

 

Tags :

Share via