கஞ்சா விற்பனை: வாலிபர் கைது.

by Staff / 26-06-2023 05:29:06pm
 கஞ்சா விற்பனை: வாலிபர் கைது. பெருந்துறை போலீஸ் எஸ்ஐ சகாதேவன் தலைமையிலான போலீசார் பெருந்துறை சென்னிமலை ரோடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர் அப்பொழுது பெரிய வீட்டு வேலையும் பிரிவு பகுதியில் சந்தேகப்படும் வகையில் கையில் பையுடன் நடந்து சென்ற ஒரு வாலிபரை தடுத்து நிறுத்தி விசாரித்த போது, அவர் சிவகிரி அருகே உள்ள வாழைத்தோட்டம் மாரங்காட்டூர் பகுதியைச் சேர்ந்த வேலுச்சாமி என்பவர் மகன் ராஜேஷ் குமார் (25) என்பதும், அவர் பெரிய வேட்டுவபாளையம் பிரிவு பகுதியில் கஞ்சா விற்பனை செய்ததும் தெரிய வந்தது அவரை கைது செய்த போலீசார், அவரிடம் இருந்த ஒரு கிலோ எடையுள்ள கஞ்சா பொட்டலங்களை பறிமுதல் செய்தனர்.
 

Tags :

Share via