மாநிலங்கள் இருப்பது மோடிக்கு பிடிக்கவில்லை - ஸ்டாலின் சாடல்
டெல்லியில் கேரள முதல்வர் பினராயி விஜயன் நடத்தும் போராட்டத்தில் காணொளி மூலம் முதல்வர் ஸ்டாலின் உரையாற்றினார். அந்த உரையில், நிதி பகிர்வில் ஒன்றிய அரசு பாரபட்சம் காட்டுவதால் மாநிலங்கள் போராட்டம் நடத்த வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளன. பிரதமர் மோடி மாநிலங்களை முனிசிபாலிட்டி போல் நடத்துகிறார். மாநிலங்கள் இருப்பதும், அதற்கு முதலமைச்சர்கள் இருப்பதும் மோடிக்கு பிடிக்கவில்லை. அவர் பிரதமர் ஆனதும் கல்வி, மொழி, நிதி, சட்ட உரிமைகளை பறித்துள்ளார். இதற்கு அவர் விரைவில் பதில் சொல்ல வேண்டி வரும் என்று சாடினார்.
Tags :