பைக் மீது கார் மோதி குழந்தை பலி

by Staff / 29-09-2023 04:43:27pm
பைக் மீது கார் மோதி குழந்தை பலி

பைக் மீது அடையாளம் தெரியாத கார் மோதியதில் ஒன்னரை வயது ஆண் குழந்தை இறந்தது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். செஞ்சி அடுத்த தேவதானம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் மகாலிங்கம் மகன் ஐயப்பன், 27; இவர் நேற்று முன்தினம் மாலை செஞ்சியில் நடந்த திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்க மனைவி புஷ்பா, 25; ஒன்றரை வயது மகன் ஜெயந்த்உ டன் ஹோண்டா பைக்கில் வந்தார். நிகழ்ச்சி முடிந்து இரவு 7: 30 மணியளவில் திரும்பிச் செல்லும் போது செஞ்சி ராஜகிரி கோட்டை அருகே செஞ்சியில் இருந்து திருவண்ணாமலை சென்ற அடையாளம் தெரியாத கார், பைக் பின்னால் மோதி விட்டு நிற்காமல் சென்றது. இதில், படுகாயம் அடைந்த குழந்தை ஜெயந்த் அதே இடத்தில் இறந்தது. புஷ்பா சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஐயப்பன் லோசான காயமடைந்தார். புகாரின் பேரில் செஞ்சி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.

 

Tags :

Share via