இந்தோனேசியாவில் திடீர் நிலநடுக்கம்

by Staff / 08-11-2023 01:57:36pm
இந்தோனேசியாவில் திடீர் நிலநடுக்கம்

இந்தோனேசியாவின் பாண்டா கடல் பகுதியில் இன்று (08) காலை 6.9 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக ஐரோப்பிய மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இந்தோனேசியாவில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.9 என பதிவான இந்த நிலநடுக்கம் காலை 10:30 மணியளவில் பாண்டா கடல் பகுதியில் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், சுனாமி எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை. இந்த நிலநடுக்கத்தில் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இதுவரை தகவல்கள் ஏதும் இல்லை.

 

Tags :

Share via