உடல் உறுப்பு தானம்: குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை...
முன்னாள் சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் சி. விஜயபாஸ்கர் புதுகையில் பேட்டி. வருகிற நாடாளுமன்ற தேர்தல் மட்டுமல்ல எந்த தேர்தல் வந்தாலும் அதனை சந்திக்க அதிமுக தயாராக உள்ளது. உடல் உறுப்பு தானம் செய்பவர்களுக்கு அரசு மரியாதை என்பது நல்ல விஷயம் என்றாலும் அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது. திமுக ஆட்சியில் சுகாதாரத்துறை செயல்படாமல் திறனற்ற துறையாக, தலை இல்லாத துறையாக உள்ளது. இதனால் மக்களும், நோயாளிகளும் பெரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். எம்ஆர்பி செவிலியர்கள் தொடர்ந்து சென்னையில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அதிமுக ஆட்சி காலத்தில் தமிழகத்தில் 2வது பல் மருத்துவ கல்லூரியினை புதுக்கோட்டையில் தொடங்குவதற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் தொடங்கப்பட்டது. ஆட்சி மாற்றத்தால் 2 ½ ஆண்டு காலம் முடிந்த பிறகும் இதுவரை பல் மருத்துவக் கல்லூரி தொடங்குவதற்கு தாமதம் செய்து வருகிறார்கள். தமிழகத்தில் டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து செயல்பட்டால் மட்டுமே டெங்குவை ஒழிக்க முடியும். வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பாகவே டெங்கு பாதிப்பு அதிகரித்து வருகிறது. இனியாவது அரசு விழித்துக் கொண்டு டெங்கு ஒழிப்பு பணிகளை முடுக்கி விட வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
Tags :