லாக்கரில்  ரூபாய்  நோட்டுகளை  வைக்கக் கூடாது- 18 லட்சம் ரூபாய் கறையான்களால்  அரிக்க....

by Admin / 01-10-2023 02:13:07am
  லாக்கரில்  ரூபாய்  நோட்டுகளை  வைக்கக் கூடாது- 18 லட்சம் ரூபாய்  கறையான்களால்  அரிக்க....

 

 

உத்தர பிரதேசத்தில்,  தன் மகளின் திருமணத்துக்காக, வங்கி லாக்கரில் , பெண் ஒருவர் வைத்திருந்த, 18 லட்சம் ரூபாயை கறையான்கள் அரித்த சம்பவம் அரங்கேறி உள்ளது.உ.பி.,யின், மொராதா பாத் மாவட்டத்தைச் சேர்ந்த அல்கா பதக், 2022 அக்டோபரில், பாங்க் ஆப் பரோடா வங்கியின், ஆஷியானா கிளையில் வங்கி லாக்கர் வைத்திருந்தார். இந்த லாக்கரில், தன் மகளின் திருமணத்துக்காக, 18 லட்சம் ரூபாயை அவர் சேமித்து வைத்திருந்தார்.சமீபத்தில், லாக்கர் ஒப்பந்தத்தை புதுப்பிக்க, அல்கா பதக்கை வங்கி ஊழியர்கள் அழைத்தனர். இதன்படி, வங்கிக்கு வந்த அவர், தன் லாக்கரை திறந்து பார்த்தார்   .அப்போது, அதில் வைக்கப்பட்டிருந்த ,  18 லட்சம் ரூபாய் ரொக்கம் கறையான்களால்  அரிக்கப்பட்டதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்தார்.இதுகுறித்து வங்கி ஊழியர்களிடம், அல்கா பதக் புகார் அளித்தார்.'இந்த சம்பவம் குறித்து வங்கி தலைமை அலுவலகத்திற்கு அறிக்கை அனுப்பி உள்ளோம். பதிலுக்காக காத்திருக்கிறோம்' என, வங்கி ஊழியர்கள் தெரிவித்தனர் .ரிசர்வ் வங்கியின் புதிய விதிப்படி, வங்கி லாக்கரில் பணத்தை வைப்பது தடை செய்யப்பட்டு உள்ளது .அதேபோல், பாங்க் ஆப் பரோடா  வங்கியின் லாக்கர் ஒப்பந்தத்திலும், நகைகள், ஆவணங்கள் தவிர,  லாக்கரில்  ரூபாய்  நோட்டுகளை  வைக்கக் கூடாது  என்றும்,  திருட்டு, கொள்ளை, தீ  விபத்து போன்ற சம்பவங்களால் இழக்கும் பொருட்களுக்கு மட்டுமே வங்கி பொறுப்பு என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது..

 

Tags :

Share via