பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்
பிரதமர் மோடிக்கு இன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் அனுப்பியுள்ளார். இந்த கடிதத்தில், “மருத்துவக் கல்லூரிகளைத் தொடங்குவது தொடர்பான தேசிய மருத்துவ ஆணைய அறிவிப்பை நிறுத்திவைக்க வேண்டும். இந்த அறிவிப்பால் தமிழகம் போன்ற மாநிலங்களில் புதிய மருத்துவக் கல்லூரிகளை தொடங்குவதில் சிக்கல் ஏற்படும். புதிய மருத்துவமனைகள், புதிய முதலீடுகள் தமிழகத்திற்கு வருவதற்கான வாய்ப்பு இல்லாமல் போய்விடும். மாநில அரசுகளுடன் ஆலோசனை மேற்கொள்ள சுகாதார அமைச்சகத்திற்கு அறிவுறுத்த வேண்டும்” என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
Tags :