குழந்தைகள் ஞாபகம் வந்துவந்ததால் வீட்டைவிட்டு வெளியேறிய ஜிபி முத்து

by Editor / 22-10-2022 11:51:43pm
 குழந்தைகள் ஞாபகம் வந்துவந்ததால் வீட்டைவிட்டு வெளியேறிய ஜிபி முத்து

விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகி வரும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி பல அதிரடி கொண்டாட்டங்களுடன் தொடங்கியது. 20 போட்டியாளர்கள் கலந்து கொண்டுள்ள இந்த நிகழ்ச்சியில் முதல் ஆளாக இணையத்தள வாசிகளுக்கு மிகவும் அறிமுகமான நபரான ஜி.பி. முத்து நுழைந்தார். ஜிபி முத்து பிக்பாஸ் வீட்டிற்குள் நுழைந்தது ரசிகர்களுடன் இணைந்து சக போட்டியாளர்களும் கொண்டாடினர். ஜிபி முத்துவின் இயல்பான பேச்சும்,அவரது செயல்பாடுகளும்  அனைவரையும் கவர்ந்தது.

இந்த சீசனில் டைட்டில் வின்னர் ஜிபி முத்தாக தான் இருக்கும் ரசிகர்கள் கணிக்கத் தொடங்கினர் . முதல் வாரத்திலிருந்து  பிக் பாஸ் வீட்டையே கலகலப்பாக்கி வந்தார் ஜிபி முத்து. ஆனால் இரண்டாவது வாரத்தில் தனது குடும்பம் மற்றும் குழந்தைகள் ஞாபகம் வந்துவிட்டதால் தான் வெளியேற போவதாக பிக்பாஸிடம் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து ஜிபி முத்து குடும்பத்தினரை அழைத்து பிக்பாஸ் குடும்பத்தினர் சமாதானம் பேசினார்.

இந்த நிலையில் தன்னை பிக்பாஸ் வீட்டை விட்டு அனுப்பாவிட்டால் உண்ணாவிரதம் இருக்கப் போவதாகவும் கூறினார். இதைத்தொடர்ந்து ஜி.பி. முத்துவிடம் பேசிய பிக்பாஸ் நிறுவனம் , முடிவு உங்களுடையது. அதனால் சக போட்டியாளர்களிடம் கூறிவிட்டு மெயின் டோர் வழியாக வாங்க என பிக்பாஸ் கூற, கண்ணீருடன் பிக் பாஸ் வீட்டை விட்டு ஜிபி முத்துஇதனால் ரசிகர்கள் அதிர்ச்சி.

 குழந்தைகள் ஞாபகம் வந்துவந்ததால் வீட்டைவிட்டு வெளியேறிய ஜிபி முத்து
 

Tags :

Share via