பண மோசடி வழக்கு 15 லட்சம் பக்க குற்றப்பத்திரிகை நகல் தாக்கல்

by Staff / 04-10-2023 02:19:27pm
பண மோசடி வழக்கு 15 லட்சம் பக்க குற்றப்பத்திரிகை நகல் தாக்கல்

சேலத்தை சேர்ந்தவர் சிவக்குமார் இவர் வின்ஸ்டார் இந்தியா என்ற பெயரில் தனியார் நிறுவனம் தொடங்கினார். குறைந்த முதலீட்டில் அதிக பணம் தருவதாக கூறியதை நம்பி ஏராளமான பொதுமக்கள் பணம் கட்டினர் ஆனால் உரியவர்களுக்கு பணம் திரும்ப கொடுக்கவில்லை இது குறித்த புகாரின் பேரில் கடந்த 2017 ஆம் ஆண்டு சேலம் பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர் அதில் ரூபாய் 200 கோடிக்கு மேல் பொதுமக்கள் பணம் கட்டி ஏமாந்து இருப்பது தெரியவந்தது இதையடுத்து சிவக்குமார் உட்பட சிலரை போலீசார் கைது செய்தனர் தற்போது அவர்கள் ஜாமீனில் உள்ளனர். இந்த வழக்கு கோவை தமிழ்நாடு முதலீட்டாளர் பாதுகாப்பு கோர்ட்டில் நடந்து வருகிறது. இந்த வழக்கு நாளை விசாரணைக்கு வருகிறது இதற்காக குற்றம் சாட்டப்பட்ட 30 பேருக்கு தலா 50ஆயிரம் பக்கம் வீதம் மொத்தம் 15 லட்சம் பக்க குற்றப்பத்திரிக்கை நகலை போலீசார் தயார்படுத்தினர் அதை நேற்று முன்தினம் சேலத்திலிருந்து வேன் மூலம் போலீசார் கோவைக்கு கொண்டு சென்றனர் இது குறித்து சேலம் குற்றப்பிரிவு போலீசார் கூறும்போது குற்றம் சாட்டப்பட்ட 30 பேருக்கு குற்றப் பத்திரிகை நகல் எடுத்து வழங்குவதற்கு அரசு 13 லட்சம் ரூபாய் வழங்கியது அதன் மூலம் 15 லட்சம் குற்றப்பத்திரிகை நகல் எடுக்கப்பட்டது இந்த நகல்களை நேற்று கோவை கோர்ட்டில் ஒப்படைத்து உள்ளோம் என்று கூறினார்.

 

Tags :

Share via