சென்னை போராட்டம் நடத்தி வந்த ஆசிரியர்கள் அதிரடியாக கைது.

by Editor / 05-10-2023 08:12:56am
சென்னை போராட்டம் நடத்தி வந்த ஆசிரியர்கள் அதிரடியாக கைது.

 தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் பணி புரிந்து வரும் பகுதி நேர ஆசிரியர்கள் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க கோரி கடந்த ஒரு வாரமாக ஆசிரியர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் சங்கம், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் கூட்டமைப்பு, பகுதி நேர சிறப்பாசிரியர்கள் ஆகிய மூன்று சங்கங்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். கோரிக்கைகள் தொடர்பாக 3 நபர் குழு அறிக்கை அளித்ததும் நடவடிக்கை எடுப்பதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் உறுதியளித்திருந்தார். இந்நிலையில்,சென்னையில் பேராசிரியர் அன்பழகன் வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களை போலீசார் கைது செய்தனர்.

 

Tags : சென்னை போராட்டம் நடத்தி வந்த ஆசிரியர்கள் அதிரடியாக கைது.

Share via