உயிரிழந்த தாயின் உடலை மகன் ட்ரேம்மில் போட்டு மூடி சம்பவம் போலீசார் விசாரணை

by Staff / 16-05-2022 05:19:08pm
உயிரிழந்த தாயின் உடலை மகன் ட்ரேம்மில்  போட்டு மூடி சம்பவம் போலீசார் விசாரணை


சென்னை நீலாங்கரையில் உடல் நலக்குறைவால் உயிரிழந்தார் தாயின் உடலை அவரது  ட்ரேம்மில் போட்டு சிமென்ட் மூலம் பூசி மூடியதாக கூறப்படும் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். நீலங்கரை சரஸ்வதி நகரைச் சேர்ந்த 86 வயதான மூதாட்டி செண்பகம் அவரது மகனுடன் வசித்து வந்தார் 53 வயதான சுரேஷ் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்பதால் அவரது மனைவி குழந்தைகளுடன் பிரிந்து சென்றதாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில் செண்பகத்தை கடந்த சில நாட்களாக காணவில்லை என்று அக்கம்பக்கத்தினர் சுரேஷிடம் கேட்டபோது அவர் உடல் நலக்குறைவால் உயிரிழந்து விட்டதாகவும் அதனால் உடனே வீட்டிலிருந்து டிரம்மில் போட்டு மூடி சிமெண்ட் வைத்து பூசி  விட்டதாகவும் கூறியுள்ளார். இதுகுறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினரும் மூதாட்டியின் உடல் இருப்பதாக கூறப்படும் ட்ரெம்பை  மீட்டு உடற்கூறு ஆய்வுக்கு  அனுப்பினர் மேலும் சந்தேக மரணம் என வழக்கு பதிவு செய்துள்ள போலீசார் உடல் நலக்குறைவு காரணமாக மூதாட்டி உயிரிழந்தாரா  அல்லது உயிருடன்ட்ரெம்மில்  அடைத்து கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் சுரேஷிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via