பைனான்சியா் கொலை: மூன்று பேர் கைது

by Staff / 06-10-2023 04:23:36pm
பைனான்சியா் கொலை: மூன்று பேர் கைது

விழுப்புரம் அடுத்த சித்தேரிக்கரை பகுதியில் பைனான்சியா் கொலை சம்பவத்தில் 3 பேரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். விழுப்புரம் அடுத்த சித்தேரிக்கரை மாரியம்மன் கோவில் தெருவைச் சோந்தவா் ராஜகோபால் மகன் ஸ்ரீராம் (எ) ராம்குமாா்(32). பைனான்சியரான இவா், சித்தேரிக்கரை ரயில்வே மேம்பாலம் அருகே முன்விரோதம் காரணமாக புதன்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுகுறித்து, விழுப்புரம் நகர போலீஸாா் கொலை வழக்குப் பதிவு செய்து கொலையாளிகளைத் தேடி வந்தனா்.இந்நிலையில், கொலை வழக்கில் சம்பந்தப்பட்டதாக சித்தேரிக்கரை பகுதியைச் சோந்த குமாா் மகன் பாலாஜி (27) கண்டமங்கலம், மாரியம்மன் கோவில் தெருவைச் சோந்த கண்ணன் மகன் பிரகாஷ் (26), அம்பேத்கா் திருநாவுக்கரசு மகன் அய்யப்பன் (21) ஆகியோரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா். இதையடுத்து, மூவரும் விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனா்.

 

Tags :

Share via