நாகை - இலங்கை இடையிலான கப்பல் ரத்து
இந்தியா - இலங்கை இடையே செல்லும் பயணிகள் கப்பல் சேவை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளது. காலை 7.30 முதல் 8.30 மணிக்கு கிளம்ப வேண்டிய கப்பல் திடீரென ரத்தானதால் பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர். சோதனை ஓட்டத்தின் போது கப்பலில் ஏற்பட்ட டெக்னிக்கல் கோளாறு காரணமாக பயணம் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. நாகையில் இருந்து, இலங்கைக்கு கப்பலில் கடல் வழி பயணம் மேற்கொள்ள 40 பயணிகள் முன்பதிவு செய்துள்ள நிலையில், கப்பல் சேவை திடீரென ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Tags :