கண்ணூர் குண்டுவெடிப்பு வழக்கில் மூவர் கைது

by Staff / 06-04-2024 03:03:55pm
கண்ணூர் குண்டுவெடிப்பு வழக்கில் மூவர் கைது

கேரளாவின் கண்ணூர் மாவட்டம் பானூரில் வெடிகுண்டு தயாரிக்கும் பணியின் போது ஏற்பட்ட வெடிவிபத்தில் வெள்ளிக்கிழமை ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் செருபரம்பைச் சேர்ந்த ஷபின்லால், குன்னோத்துப்பரம்பைச் சேர்ந்த அதுல் மற்றும் செண்டையாட்டைச் சேர்ந்த அருண் என பானூர் போலீசார் தெரிவித்தனர். குண்டுவெடிப்பு நடந்த போது கைது செய்யப்பட்ட மூவரும் சம்பவ இடத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இன்று  காலை 11:30 மணியளவில் போலீசார் அந்த இடத்தில் தடயங்களை சேகரித்தனர்.கைது செய்யப்பட்ட மூன்று நபர்களும் சிபிஎம் கட்சி ஆதரவாளர்கள் எனக் கூறப்படும் நிலையில் இதில் வேறு யாருக்காவது தொடர்பு உள்ளதா என விசாரிக்கின்றனர்.

 

Tags :

Share via