தனியார் கல்லூரி விடுதியில் மாணவன் தற்கொலை

by Staff / 07-12-2022 03:50:59pm
 தனியார் கல்லூரி விடுதியில்  மாணவன் தற்கொலை

கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் மனோஜ் இவரது மகன் விஷ்ணு (19)இவர் பொள்ளாச்சி அருகே உள்ள திப்பம்பட்டி பகுதியில் உள்ள கல்லூரியில் விடுதியில் தங்கி படித்து வந்தார்மாதிரிதேர்வு முடிந்த நிலையில்ஊருக்கு செல்லாமல்விடுதியில் இருந்த மாணவன் நேற்று இரவு நீண்ட நேரமாகியும்
உணவு அருந்த வராததால் அங்குள்ள சக மாணவர்கள் அவரை அழைக்கச் சென்றனர்.

நீண்ட நேரம் ஆகியும் கதவுவை திறக்காததால் ஜன்னல் வழியாக பார்த்தபோது தூக்கில்
தூங்கிவாரு இருப்பதை கண்டு மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.பின்னர் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது மாணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்ததுபின்னர் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு போலீசார் விஷ்ணுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்

மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
மாணவன் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை அறிந்து நூற்றுக்கணக்கான மாணவர்கள் அங்கு திரண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டதுமாணவன் தூக்கில் தொங்கியவாறு இருந்ததை கண்டு கல்லூரி நிர்வாகத்திடம் சொல்லி நீண்ட நேரம் ஆகியும் வராமல் அலட்சியத்துடன் இருந்ததாகவும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம் சாட்டியுள்ள மாணவர்கள்மாணவன் இறப்புக்கான காரணத்தை போலீசார் விசாரணை செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் வலியுறுத்துள்ளனர்

 

Tags :

Share via