கஞ்சா விற்பனை வாலிபர் கைது

by Staff / 07-12-2022 03:53:40pm
கஞ்சா விற்பனை வாலிபர் கைது

ஆனைமலை முக்கோணத்தில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அங்கு சப்-இன்ஸ்பெக்டர் கவுதம் தலைமையிலான போலீசார் ரோந்து சென்றனர். அப்போது கையில் பையுடன் சந்தேகத்துக்கிடமாக நின்ற ஒருவரை பிடித்து விசாரணை செய்தனர். அதில் அவர், சேலம் மாவட்டத்தை சேர்ந்த ஹானஸ்ட் ராஜ்(வயது 28) என்பதும், பையில் 600 கிராம் கஞ்சாவை வைத்து விற்பனை செய்து கொண்டு இருந்ததும் தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via