டெல்லியில் இஸ்ரேல் தூதரகத்துக்கு பாதுகாப்பு அதிகரிப்பு
இஸ்ரேல்-பாலஸ்தீன போரை அடுத்து, டெல்லியில் உள்ள இஸ்ரேல் தூதரகத்துக்கு டெல்லி காவல்துறை பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளது. இந்தியாவில் உள்ள இஸ்ரேல் தூதரின் அதிகாரப்பூர்வ இல்லத்திற்கும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இஸ்ரேலிய தூதர் நூர் கிலோனின் இல்லத்திற்கு வெளியே கூடுதல் போலீஸ் வாகனங்கள் நிறுத்தப்பட்டன. புது டெல்லியன் பஹர்கஞ்ச் பகுதியில் உள்ள யூதர்களின் மதத் தலமான சபாத் ஹவுஸ் அருகேயும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இஸ்ரேல் - பாலஸ்தீனப் போர். கடந்த இரண்டு நாட்களாக நடைபெற்றுவரும் போரில் இதுவரையில் 1000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கின்றனர்.
Tags :