என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் பலி

by Staff / 10-10-2023 03:02:06pm
என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் பலி

ஜம்மு காஷ்மீரில் இன்று நடந்த என்கவுன்டரில் இரண்டு பயங்கரவாதிகள் உயிரிழந்துள்ளனர். ஷோபியான் பகுதியில் பாதுகாப்புப் படையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 2 பயங்கரவாதிகள் பலியாகியுள்ளனர். இன்று (செவ்வாய்க்கிழமை) அதிகாலை ஷோபியான் அல்ஷிபோரா பகுதியில் என்கவுன்டர் தொடங்கியதாக ஜம்மு காஷ்மீர் காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது. உயிரிழந்துள்ள இரண்டு பயங்கரவாதிகள் மொரிபத் மக்பூல் மற்றும் அப்ரார் என்ற ஜசீம் ஃபாரூக் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மேலும், காஷ்மீர் பண்டிட் சஞ்சய் சர்மா கொலையில் இந்த பயங்கரவாதிகளுக்கு தொடர்பு இருப்பதாக காஷ்மீர் போலீசார் தெரிவித்தனர்.

 

Tags :

Share via