நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடைகள் அடைப்பு 

by Editor / 11-10-2023 08:03:03am
நாகப்பட்டினம் மாவட்டத்தில் கடைகள் அடைப்பு 

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய தண்ணீரை வழங்க மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும் பெற்று தராத மத்திய அரசை கண்டித்தும் காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.அனைத்து கட்சி சார்பில் நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வணிகர்கள் நாகப்பட்டினம், வேளாங்கண்ணி, நாகூர், திருமருகல்,கீழ்வேளூர், தலைஞாயிறு, வேதாரண்யம் உள்ளிட்ட மாவட்டம் முழுவதும் 20,000க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து ஆதரவு தெரிவித்துள்ளனர்

 

Tags :

Share via