காவிரி:திருவாரூர் மாவட்டத்தில் 30ஆயிரம் கடைகள் அடைப்பு. 5ஆயிரம் லாரிகள் ஓடவில்லை
காவிரியில் இருந்து தமிழகத்திற்கு கொடுக்க வேண்டிய தண்ணீரை வழங்க மறுக்கும் கர்நாடக அரசை கண்டித்தும் பெற்று தராத மத்திய அரசை கண்டித்தும் காவிரி படுகை பாதுகாப்பு கூட்டியக்கம் சார்பில் இன்று முழு அடைப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
அனைத்து கட்சி சார்பில் நடைபெறும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வணிகர்கள் திருவாரூர் மாவட்டம் முழுவதும் 30,000க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து ஆதரவு தெரிவித்துள்ளனர்.இதேபோன்று லாரி உரிமையாளர்கள் மாவட்ட முழுவதும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட லாரிகளை நிறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
Tags : காவிரி:திருவாரூர் மாவட்டத்தில் 30ஆயிரம் கடைகள் அடைப்பு. 5ஆயிரம் லாரிகள் ஓடவில்லை