மாணவியை தாக்கிய நடத்துநர்: போலீசில் புகார்

by Staff / 12-10-2023 12:20:42pm
மாணவியை தாக்கிய நடத்துநர்: போலீசில் புகார்

சென்னை மாமல்லபுரத்தை சேர்ந்த 15வயது மாணவி அங்குள்ள பள்ளியில் பத்தாம் வகுப்பு படித்து வருகிறார்.
நேற்று முன் தினம் பள்ளி முடிந்து பேருந்துக்காக காத்திருந்தபோது தாம்பரத்திலிருந்து பேருந்தில் ஏறி உள்ளார்.
கூட்டம் அதிகமாக இருந்ததால் மாணவி கடைசியாக ஏறியதாக கூறப்படுகிறது.அப்போது படிக்கட்டில் நின்றிந்த மாணவியை கன்னத்தில் அறைந்துள்ளார். இது குறித்து மாணவியரின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

 

Tags :

Share via