பழனிசாமிக்கு எதிராக திமுக மான நஷ்ட வழக்கு

by Staff / 14-03-2024 04:42:41pm
பழனிசாமிக்கு எதிராக திமுக மான நஷ்ட வழக்கு

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக மான நஷ்டஈடு கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் திமுக சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. ரூ.1 கோடி வரை மான நஷ்டஈடு கோரி திமுக சார்பில் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். போதைப்பொருள் தடுப்பு விவகாரத்தில் தவறான தகவல்களை எடப்பாடி பழனிசாமி கூறியதாக மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த வழக்கு விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
 

 

Tags :

Share via