வெளிநாட்டு வேலை வாங்கி தருவதாக ரூ6 லட்சம் மோசடி வாலிபர் கைது

by Staff / 14-10-2023 01:26:15pm
வெளிநாட்டு வேலை வாங்கி தருவதாக ரூ6 லட்சம் மோசடி வாலிபர் கைது

தஞ்சை அருகே வல்லம் அய்யனார் கோயில் தெருவை சேர்ந்தவர் முருகன் (49). இவரது மகன் கவுதமன். கவுதமனை வெளிநாட்டு வேலைக்கு அனுப்ப முருகன் பலரிடம் சொல்லி வைத்தார். இந்நிலையில் தஞ்சை மானம்புச்சாவடியை சேர்ந்த கண்ணன் மகன் அருணுக்கும் (30) கவுதமனுக்கும் அறிமுகம் ஏற்பட்டது. வெளிநாட்டு வேலைக்கு அனுப்பி வைக்கிறேன் என்று அருண் கூறியதை நம்பிய கவுதமன் கடந்த 2022 பிப்ரவரி 14ம் தேதி அருணிடம் ரூ. 6 லட்சம் கொடுத்தார்.ஓராண்டுக்கும் மேல் கடந்த நிலையில் கவுதமனுக்கு வெளிநாட்டில் வேலைக்காக சேர்த்து விட அருண் எவ்வித ஏற்பாடுகளையும் செய்யவில்லை.இதையடுத்து தான் கொடுத்த பணத்தை திருப்பி கொடுக்கும்படி அருணிடம் பலமுறை கவுதமன் கேட்டும் பணத்தை அருண் திருப்பி தரவில்லை. இதுகுறித்து முருகன் வல்லம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் காவல்துறையினர் வழக்குபதிந்து அருணை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

 

Tags :

Share via