இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் கைது.

by Staff / 15-10-2023 05:02:52pm
இளைஞர் அடித்துக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 3 பேர் கைது.

மானூர் கிராமத்தில் சண்முகநதி ஆற்றுப்பாலத்திற்கு அடியில் நேற்று முன்தினம் இளைஞர் சிவா என்பவர் அடித்துக் கொலை செய்யப்பட்டான். சம்பவம் அறிந்து சென்ற போலீசார் கொலை நடந்த இடத்தில் தடயங்களை சேகரித்து விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் போலீசாரின் விசாரணையில் இளைஞர் சிவாவை பழனியை அடுத்துள்ள வண்டிவாய்க்கால் பகுதியை சேர்ந்த அருண், விக்னேஷ், சிவா என்ற மூன்று இளைஞர்கள் சேர்ந்து அடித்து கொலை செய்தது தெரிய வந்தது. நேற்று முன்தினம் கொலை செய்யப்பட்ட சிவா, இருசக்கர வாகனத்தில் வந்த அருண்குமாரின் செல்போனை கடந்த 8 ம் தேதி பறித்து சென்றதும், பின்னர் செல்போனை கேட்டு அருண்குமார் தனது நண்பர்களுடன் சென்று சிவாவை ஒருவாரமாக தேடிய நிலையில் எப்போதும் நண்பர்கள் கூட்டத்திலே சிவா இருந்ததால் மூவரும் திரும்பி சென்றனர். கடந்த 12 ம் தேதி மாலை சிவா மானூர் ஆற்று பாலத்தில் தனியாக மது அருந்தி கொண்டிருந்த போது செல் போனை கேட்ட போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் மூவரும் சேர்ந்து சிவாவை தாக்கியதில் சிவா உயிர் இழந்ததும் பின்னர் ஆற்றுப்பாலத்துக்கு அடியில் உடலை போட்டு சென்றதும் போலீஸாரின் விசாரணையில் தெரிய வந்துள்ளது.. கொலை தொடர்பாக மூவரையும் கைது செய்துள்ள போலீசார் வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர். கொலை செய்யபட்ட சிவா மீது கீரனூர் காவல் நிலையத்தில் திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளது.

 

Tags :

Share via