சேலை விற்பனை கடையில் பயங்கர தீவிபத்து

by Staff / 03-10-2023 01:46:43pm
சேலை விற்பனை கடையில் பயங்கர தீவிபத்து

குஜராத்தின் சூரத்தில் இன்று  பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. சூரத்தின் வராச்சா பகுதியில் உள்ள பழைய பாம்பே மார்க்கெட்டில் உள்ள சேலை விற்பனை கடையில் தீ விபத்து ஏற்பட்டது. சுமார் பத்து, பன்னிரண்டு தீயணைப்பு வாகனங்களில் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் கடுமையாக போராடி தீயை அணைத்தனர். நெரிசல் மிகுந்த சந்தை என்பதால் தீயை அணைப்பது தீயணைப்பு வீரர்களுக்கு சவாலாக இருந்தது. இந்த தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாகின. தீ விபத்திற்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

 

Tags :

Share via