வடமாநில தொழிலாளர்கள் வீடியோக்களை பரப்பிய மனீஷ் காஷ்யப் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்..

by Editor / 30-03-2023 09:29:17am
வடமாநில தொழிலாளர்கள் வீடியோக்களை பரப்பிய மனீஷ் காஷ்யப் இன்று நீதிமன்றத்தில் ஆஜர்..

தமிழ்நாட்டில் புலம்பெயர் தொழிலாளர்கள் தாக்கப்படுவது போன்ற போலி வீடியோக்களை பரப்பியதாக குற்றம் சாட்டப்பட்ட யூடியூபர் மணீஷ் காஷ்யப், பீகாரின் மேற்கு சம்பாரனில் காவல்துறையில் சரணடைந்தார்.

கைது மற்றும் பிற சட்ட நடவடிக்கைகளுக்கு பயந்து காஷ்யப் சரணடைந்துள்ளதாக பீகார் காவல்துறை தெரிவித்தது. மேலும் காவல்துறை, காஷ்யப் மீது 3 வழக்குகளை பதிவு செய்து, அவரது 4 வங்கி கணக்குகளையும் முடக்கியுள்ளது.

 மனிஷ் காஷ்யப்  மீது மதுரை மாவட்ட சைபர் பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்த நிலையில் பீகார் சென்ற மதுரை மாவட்ட காவல்துறையினர் மனிஹ் காஷ்யப்பை கைது செய்து இன்று காலை மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் காலை 10மணிக்கு ஆஜர்ப்படுத்த உள்ளனர்.

 

Tags :

Share via