பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை

by Staff / 03-10-2023 01:44:02pm
பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை

சாதிவாரி கணக்கெடுப்பை நடத்தி, முடிவுகளை வெளியிட்ட பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாருக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் பாராட்டுகளை தெரிவித்துள்ளார். இது குறித்து இன்று பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சாத்தியமே இல்லாதது என்பது போன்ற மாயை ஏற்படுத்தப்பட்டு வந்த சாதிவாரி கணக்கெடுப்பை வெற்றிகரமாக நடத்தி, முடிவுகளை வெளியிட்ட பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாருக்கு எனது பாராட்டுகள். சமூக நீதியை வழங்குவதில் ஆர்வமுள்ள மற்ற மாநிலங்களும், குறிப்பாக தமிழ்நாடும் சாதிவாரி கணக்கெடுப்பை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்” என தெரிவித்துள்ளார்.

 

Tags :

Share via