பைக் மீது கார் மோதி விபத்தி.. 3 பேர் பலி

by Staff / 16-10-2023 04:36:36pm
பைக் மீது கார் மோதி விபத்தி.. 3 பேர் பலி

சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் கோவளம் அருகே முன்னே சென்றுகொண்டிருந்த பைக் மீது கார் பின்னால் மோதியதில், பைக்கில் பயணித்த கணவன், மனைவி மற்றும் குழந்தை உயிரிழந்துள்ளனர். கல்பாக்கம் அனுமின் நிலைய ஊழியரான தனசேகர் அவரின் மனைவி இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், அவர்களின் குழந்தை படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும், ஆந்திர பதிவு எண் கொண்ட காரை ஓட்டி வந்த நபரை பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via