எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

by Staff / 16-10-2023 05:15:59pm
எடப்பாடி பழனிசாமிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு

வேட்புமனுவில் சொத்து விவரங்களை மறைத்ததாக முன்னாள் முதலமைச்சரும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக, உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட கோ-வாரன்டோ வழக்கு நவம்பர் 3ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. இது தொடர்பாக பழநி தொகுதி அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஏ.சுப்புரத்தினம் தொடர்ந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது வேட்புமனுவில் தவறான தகவல் அளிப்பதை தகுதியிழப்பாக கருதமுடியாது என அரசுத்தரப்பில் தெரிவிக்கப்பட்டது. முன்னுதாரண தீர்ப்புகளை தாக்கல் செய்ய ஏ.சுப்புரத்தினத்திற்கு உயர் நீதிமன்றம் கால அவகாசம் அளித்து, வழக்கை நவம்பர் 3ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.

 

Tags :

Share via