நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக கருத்து வெளியிட்ட தையல்காரர் தலை துண்டித்து கொடூர கொலை

by Editor / 29-06-2022 09:12:49am
நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக கருத்து வெளியிட்ட தையல்காரர் தலை  துண்டித்து கொடூர கொலை

நபிகள் நாயகத்துக்கு எதிராக சர்ச்சைக்குரிய கருத்து வெளியிட்டவர் பாஜக செய்தி தொடர்பாளராக இருந்த நுபுர் சர்மா மீது கட்சித்தலைமை நடவடிக்கை எடுத்தது. இந்த நிலையில் ராஜஸ்தான் மாநிலம், பூட்மகால் என்ற இடத்தில் தையல் கடை நடத்தி வருகிற தையல்காரர் கன்னையா டெலி என்பவர் நுபுர் சர்மாவுக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் தொடர்ந்து கருத்து வெளியிட்டுள்ளார். இந்த நிலையில் 2 பேர் கூர்மையான கத்திகளுடன் கன்னையா டெலி கடைக்கு வந்து அவரது கழுத்தை அறுத்து தலையை துண்டித்து கொன்றனர். இதனை கொலையாளிகளே வீடியோ படம் எடுத்து வெளியிட்டனர். இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது. கொலையாளிகள் 2 பேரும் பீம் பகுதியில் நேற்றிரவு கைது செய்யப்பட்டனர். ராஜஸ்தானில் தொடர்ந்து பதற்றம் நிலவுவதால் 1 மாதத்திற்கு அனைத்து மாவட்டங்களிலும் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது. ராஜஸ்தான் முழுவதும் நேற்று இணையதள சேவை முடக்கப்பட்டது.

 

Tags : Tailor beheaded and brutally murdered for commenting in favor of Nupur Sharma

Share via