50,000-ஐ தாண்டிய பலி எண்ணிக்கை
துருக்கி மற்றும் சிரியாவில் இம்மாதம் 6ஆம் தேதி கடும் நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆயிரத்தை கடந்துள்ளது. துருக்கியில் 44,218 பேரும், சிரியாவில் 5,914 பேரும் உயிரிழந்துள்ளதாக உள்ளூர் அரசாங்கங்கள் தெரிவித்துள்ளன. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 1.60 லட்சம் கட்டிடங்கள் மற்றும் 5.20 லட்சம் குடியிருப்புகள் சேதமடைந்துள்ளன. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் 15 லட்சம் பேர் வீடுகளை இழந்துள்ளனர்.
Tags :