கொடநாடு கொலை வழக்கின் முக்கிய குற்றவாளி கொலை.. மனைவி புகார் சகோதரர் கைது

by Editor / 29-06-2022 09:00:40am
கொடநாடு கொலை வழக்கின் முக்கிய குற்றவாளி கொலை.. மனைவி புகார்  சகோதரர் கைது

கொடநாடு எஸ்டேட்டில் நடந்த கொலை, கொள்ளை சம்பவம் தொடர்பாக ஊட்டி நீதிமன்றத்தில் மறுவிசாரணை நடைபெற்று வருகிறது. இதற்காக அமைக்கப்பட்டுள்ள 5 தனிப்படை போலீசார் வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட சயான், மனோஜ் உள்ளிட்டவர்களிடம் விசாரணை மேற்கொண்டனர். கொடநாடு கொலை கொள்ளை வழக்கு தொடர்பாக சசிகலாவிடமும் மேற்கு மண்டல ஐ.ஜி. சுதாகர் தலைமையிலான போலீசார் விசாரணை மேற்கொண்டனர். கடந்த சிலநாட்களுக்கு முன்னர் சயான், வாளையார் மனோஜ், ஜம்சீர் அலி, சதீசன், பிஜின்குட்டி, உதயன், சந்தோஷ் சாமி ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர். வழக்கை விசாரித்த நீதிபதி விசாரணையை அடுத்த மாதம் 29-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டிருந்தார். முன்னதாக கொடநாடு வழக்கில் தொடர்புடைய கனகராஜ் சேலம் ஆத்தூரில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது கார் மோதி மர்மமான முறையில் இறந்தார். கனகராஜின் மரணம் விபத்து அல்ல, கொலை என காவல் நிலையத்தில் அவரது மனைவி புகார் அளித்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கின் கனகராஜ் மனைவி அளித்த புகாரின் அடிப்படையில்  கனகராஜின் சகோதரர் பழனிவேல் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

Tags : The main culprit in the Kodanadu murder case is murder .. Wife complains brother arrested

Share via