புதுமண தம்பதி கிணற்றில் குதித்து பலி

by Staff / 02-01-2024 03:57:33pm
புதுமண தம்பதி கிணற்றில் குதித்து பலி

சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே மாரியம்மன்புதூர் பகுதியைச் சேர்ந்தவர் அருள்முருகன் (வயது 27). கொத்தனார் வேலை செய்து வருகிறார். இவர் சந்திரபிள்ளைவலசு பகுதியில் உள்ள சமத்துவபுரம் பகுதியில் வசித்து வரும் அபிராமி (19) என்ற பெண்ணை கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பாக திருமணம் செய்துள்ளார்.   இந்த நிலையில் நேற்று நள்ளிரவு 11 மணி அளவில் கணவன் மனைவி இருவருக்கும் வாய் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது கோபம் அடைந்த அபிராமி அருகில் இருந்த மாணிக்கம் என்பவருடைய சுமார் 100 அடி ஆழமுள்ள விவசாய கிணற்றில் திடீரென ஓடிச்சென்று கிணற்றில் குதித்துள்ளார். இதனைக் கண்ட கணவன் அருள்முருகனும் செய்வதறியாது திகைத்து மனைவியை காப்பாற்ற அவரும் கிணற்றில் குதித்துள்ளார். கிணற்றில் தண்ணீர் குறைவாக இருந்ததால் அபிராமியின்  தலையில் பலத்த காயமடைந்து கிணற்றிலே உயிரிழந்தார். மனைவியை காப்பாற்ற கிணற்றில் குறித்த அருள்முருகனும் உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த வாழப்பாடி போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் கிணற்றிலிருந்து அருள்முருகன் மற்றும் அபிராமி இருவரின் உடலையும் சடலமாக மீட்டனர்.  கணவன் மனைவி இருவரும் என்ன காரணத்திற்காக சண்டை போட்டனர் என வாழப்பாடி போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Tags :

Share via