ஹைதராபாத்தில் கனமழை 7 பேர் பலி

by Staff / 08-05-2024 03:59:40pm
ஹைதராபாத்தில் கனமழை 7 பேர் பலி

தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் நேற்று திடீரென பெய்த கனமழையால் நகர் முழுவது வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பாச்சுபள்ளியில் ரேணுகா எல்லம்மா என்ற காலனியில், ஒரு அடுக்குமாடி குடியிருப்பு கட்டப்பட்டு வருகிறது. இந்நிலையில் நேற்று பெய்த திடீர் மழையில், அடுக்குமாடி கட்டடத்தில் புதிதாக கட்டப்பட்ட 20 அடி சுவர் இடிந்து அங்கு தங்கியிருந்த தொழிலாளர்கள் மேல் விழுந்துள்ளது. 8 வயது சிறுமி உட்பட இதில் 7 தொழிலாளிகள் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்துள்ளனர். காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர்.

 

Tags :

Share via