சாராயம் விற்ற பெண் கைது

by Staff / 19-10-2023 01:58:46pm
சாராயம் விற்ற பெண் கைது

திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே உள்ள பி. எல். தண்டா பகுதியில் சாராயம் விற்பனை நடைபெறுவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது பி. எல். தண்டா பகுதியில் சுஜாதா (வயது 34) என்ற பெண் கள்ளச்சாராயம் விற்பனையில் ஈடுபட்டு இருந்தார். அவரை போலீசார் கைது செய்து சாராயத்தை கீழே கொட்டி அழித்தனர்.

 

Tags :

Share via